Friday, May 25, 2012

கூட்டுக் களவாணிகளின் ஒப்பாரி!!

பெட்ரோல் விலை உயர்வு! - கூட்டுக் களவாணிகளின் ஒப்பாரி!!



நேற்று விடிகாலை முதல் அமல்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வருகிற 31ந்தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

நாளிதழ்களில் அனைத்துக் கட்சியினரும் கொதித்துப் போய் பேட்டி அளித்துள்ளனர். அதாவது காங்கிரஸ் அரசின் மெத்தனப் போக்கால் மட்டுமே இந்த பெட்ரோல் விலை உயர்வு என்று கூவி கூவி அழுகின்றனர்.

இந்தக் களவாணிகள் தான் அன்று பெட்ரோல் விலையை தனியார் கையில் ஒப்படைக்கும் போது வெறும் அடையாள ஒரு நாள் போராட்டம் மட்டும் அறிவித்து அத்தோடு சுய திருப்தி அடைந்து கொண்டனர். அன்றே இந்தியா முழுவது பெரிய தொழிற்சங்கம் வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தால் பெட்ரோல் விலையை தனியார் வசம் ஒப்படைக்கும் அந்தக் கொள்கையை அமல்படுத்தப்பட்டிருக்காது நிறுத்தியிருக்கமுடியும். ஆனால் சி.பி.எம் அவ்வாறு செய்யவில்லை.
தமிழ்நாட்டில் ஹுண்டாய் நிறுவனம் சிஐடியு தொழிற்சங்கத்தின் கீழ் போராடிய 3000 தொழிலாளர்களை வேலையை விட்டு ஒரே நாளில் தூக்கியெறிந்த போது தமிழக்கத்தில் ஒரு நாள் கடையடைப்புக்கு கூட அறைகூவல் விடுக்காமல் அத்தொழிலாளர்களுக்கு துரோகம் விளைவித்த கட்சி தான் இந்த சி.பி.எம். ஆனால் இப்போது பிருந்தா காரத் கோவையில் ஒரு கண் துடைப்புப் போராட்டம் நடத்துகிறார். இந்த நீலிக் கண்ணீர் ஒப்பாரி யாரை ஏய்க்க ?.

அடுத்தது பாஜக. இந்த யோக்கிய சிகாமணிகள் தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கத்தில் காங்கிரசிற்கு இரண்டு படி மேல் சென்று திட்டத்தை அமல்படுத்தியவர்கள். பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை தனியார் கையில் ஒப்படைத்த போது எந்த ஒரு நாடு தழுவிய எதிர்ப்பையும் காட்டாத பாஜக, இன்று ஊரை ஏமாற்ற ஒப்பாரி வைக்கிறது.

இந்த போலி கம்யூனிஸ்டுகளும் சரி, இந்த பாஜக பொம்பளை பொறுக்கிகளும் சரி, மற்ற எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகளும் சரி, தங்களது எதிர்ப்பை இவ்விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணமான, தனியார்மயம் தாராளமயம், உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக வெறும் பேட்டியளவில் கூட அறிக்கை வெளியிட மறுக்கிறார்கள். பின்னர் எங்கே போராட்ட அளவில் இந்த பெட்ரோல் விலை உயர்வின் மூலக்காரணத்தை எதிர்ப்பது?..

இந்த ஓட்டுப் பொறுக்கி நாய்களின் நீலிக்கண்ணீர் ஒப்பாரி போராட்டத்தை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும். அடித்து தகர்ப்பட வேண்டியது தனியார்மயம் தாராளமயம் உலகமயக் கொள்கைகள் மட்டுமல்ல, இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளையும் தான்.

சிந்திப்பீர்... செயல்படுவீர் ...






Thursday, May 24, 2012

எல்லாமே தனியார் கையில வந்தா தான் சார் இந்த நாடு முன்னேறும் !!

”எல்லாமே தனியார் கையில வந்தா தான் சார் இந்த நாடு முன்னேறும் !!”

இந்த வசனத்தை எங்கோ கேட்டது போல் இருக்குமே!.. எங்கே என்று தேட வேண்டாம். சராசரியாக வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வரை சென்று திரும்புவதற்குள் குறைந்தது இரண்டு முறையாவது பல விதங்களில் இந்த வசனம் நம் காதுகளை தட்டிச் சென்றிருக்கும்.

இது இந்தியாவின் நடுத்தரவர்க்கத்தின் 90 சதவீதத்தினரது குரலாகும்.
இவர்களது அறிவுப்பூர்வமான வாதம் “ தனியார் கையில் போனால் போட்டி இருக்கும். போட்டி இருந்தால் விலை குறையும். அரசாங்கத்தின் கையில் இருந்தால் அரசு ஊழியர்கள் ஊழல் செய்வார்கள்” என்பது தான்.

இதே யோக்கிய சிகாமணிகள் தான் , சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணைக்கும், பிள்ளைகளை அரசு கல்லூரிகளில் சேர்ப்பதற்கும் துடியாய துடிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இதோ பெட்ரோல் தனியார் மயமாகிவிட்டது.
மின்சாரம் தனியார் மயமாகப் போகிறது..
குடிநீர், உபயோகத்திற்கான நீர் தனியார்மயமாகப் போகிறது..

இன்று பெட்ரோல் விலையில் நாடு முன்னேறிவிட்டது.
நாளை மின்சார விலையிலும் , நீரின் விலையிலும் முன்னேறப் போகிறது.

சரி நாம் ?.. என்னேறப் போகிறோம் ?..

இனியாவது நடுத்தரவர்க்க அறிவுஜீவிகள் உணர்வார்களா ?.. இங்கிருக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் தனியார்மயம் , தாராளமயம், உலகமயம் தான்  காரணம் என்று ?..

உணர்ந்து இணைந்து போராடத் துவங்கினால் வாழ்வு..

இல்லையேல் ஐந்தாண்டுக்கொரு முறை மட்டும் தேவைப்படும் ஒரு அற்ப ஜீவனாய் வாழ்வின் சகல துன்பங்களோடும்  சகித்துக் கொண்டு வாழ வேண்டியது தான் ...

மகிழ்ச்சி என்பது போராட்டமே!!..



Wednesday, May 23, 2012

பொருளாதாரப் புலி - பத்ரி சேஷாத்ரி


கடந்த 12.05.2012 அன்று கர்ணனின் வில்லிலிருந்து புறப்பட்ட நாகாஸ்திரத்திலிருந்து அர்ச்சுனனைக் காக்க தேரை பூமியினுள் அழுத்தி தக்க தருணத்தில் அர்ச்சுனனின் உயிர் காத்த கிருஸ்ண பரமாத்மாவைப் போன்று பொருளாதார வீழ்ச்சி எனும் நாகாஸ்த்திரத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற தனது கணிணி பொத்தான்களை அழுத்தி அழுத்தி இந்தியத் திருநாட்டை காக்க முயன்ற கிருஸ்ண பரமாத்மா ஒருவர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். படித்து முடித்ததும் கண்களின் ஓரத்தில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. தேசத்தின் மீது என்னவொரு பாசம்? நாடே எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்று தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த சூழ்நிலையில் யூகே(UK) விலிருந்தாலும் தாய்நாட்டை மறவாது அதன் மீது அக்கறை செலுத்தக் கூடிய இந்திய தேசத்தின் வருங்கால நிதியமைச்சராகும் தகுதி கொண்ட அந்த பொருளாதார மேதை யாராக இருக்கும் ?..
அவர் வேறு யாருமல்ல!. நமது கிழக்கு பதிப்பகம் பத்ரிசேஷாத்ரி அவர்கள் தான்.அப்படி என்ன யாருக்குமில்லாத தேச பக்தி அவருக்கு என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். இதோ அவர் எழுதிய அந்தப் பதிவு சுருங்கும் தொழில்துறை - இந்தியாவுக்கு ஆபத்து. இந்தியாவின் தலைக்கு வந்த ஆபத்தை தலைப்பாகையோடு போகச் செய்ய இந்த கிருஸ்ண பரமாத்மா அப்படி என்ன தான் முயற்சி செய்திருக்கிறார் என்று இனி பார்க்கலாம்.
முதலில் நமது பொருளாதார மேதைக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். காரணம், காலங்காலமாக முதலாளிகள் தொழில் நடத்துவதே தொழிலாளிகளின் வேலைவாய்ப்பிற்காகத் தான் என்கிற வாதத்தை தனது கட்டுரையின் முதல் வரியிலேயே கிழித்து குப்பையில் போட்டுள்ளார். தொழில்துறை முதலாளிகள் இலாபம் சம்பாதிப்பதற்காகவே நிறுவனங்களை நடத்துகிறார்கள் என்று ஒரு முதலாளியாய் ஒப்ப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
கட்டுரை முழுவதும் ஒரு சிறு குழந்தைக்கு சொல்லித் தரும் அக்கறையோடு தனித் தனியாக ஒவ்வொன்றையும் உதாரணத்தோடு விளக்கியிருக்கிறார் பத்ரி. முதலில் இந்தியாவில் சென்ற ஆண்டு தொழில்துறை உற்பத்தி குறைந்ததற்கான காரணங்களைப்பற்றி அலசுகிறார். பின்னர் அந்த காரணங்களை அக்கக்காக பிரித்து மேய்ந்து அதனை கணிவுடன் விளக்குகிறார்.சரியான முடிவு எடுக்கத்தெரியாத ரிசர்வ் வங்கியையும் இந்திய அரசையும் உரிமையோடு கடிந்து கொள்கிறார். அடுத்ததாக விவசாயிகளின் நிலை குறித்து மிகக் கவலையுடன் மோவாயை தடவிக் கொண்டே அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்தும் தீவிரமாக சிந்தித்து எழுதியுள்ளார். இதுவரை இந்த அரசாங்கம் இப்பிரச்சனையில் என்ன செய்திருக்க வேண்டும்?, இனி என்ன செய்ய வேண்டும்? என்பதையும் விளக்கியிருக்கிறார் பத்ரி.
சந்தையின் தேவைக் குறைவும், முதலாளிகளின் இலாபக் குறைவும் தான் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று கண்டுபிடித்த கையோடு அதன் காரணத்தையும் அலசி ஆராய்ந்திருக்கிறார். சுய ஒப்புதல் வாக்குமூலத்தோடு தனது கட்டுரையை ஆரம்பித்த பத்ரி, கட்டுரை நெடுகிலும் தனது பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே செல்கிறார். எடுத்த எடுப்பிலேயே உள்நாட்டு நுகர்வுக்கு பொருள் தயாரிக்கும் முதலாளிகள் இந்தியாவில் குறைவான இலாபம் மட்டுமே ஈட்ட முடிகின்றது என்ற புளுகை சத்தமில்லாமல் உதிர்த்து விட்டிருக்கிறார்.
பால் பாக்கெட்டிலிருந்து மருந்து மாத்திரை வரைக்கும் முதலாளிகள் அடிக்கும் கொள்ளையையே குறைவான இலாபம் என்கிறார் பத்ரி. பத்ரியின் அளவு கோலின் படி இன்னும் அதிக இலாபத்திற்கு முதலாளிகள் விற்பனை செய்ய ஆரம்பித்தால்... ? எண்ணிப் பார்க்கும் போதே கிலி ஏற்படுகிறது. அடுத்தது உள்நாட்டில் நுகர்வு குறைந்தது பற்றி அலசுகிறார். அதனை சரிகட்ட அரசு என்ன செய்திருக்க வேண்டும் என்றும் சில தீர்வுகளை கறாராக நம் முன் வைக்கிறார்.
இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து விட்டது தான் இங்கிருக்கும் சந்தையின் தேக்க நிலைக்கு காரணம் என்று கூறி ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் தான் மக்கள் கடன் அட்டையில் பொருள்களை வாங்க முன் வருவார்கள். அப்போது தான் சந்தையின் தேவை அதிகரிக்கும். முதலாளிகள் பொருளுற்பத்தி செய்வார்கள். தொழில்துறை முன்னேறும் என்று அடுத்த தேங்காயை உடைக்கிறார் பத்ரி.
தனக்கு தேவையோ தேவையில்லையோ, காசு கையில் இருக்கிறதோ இல்லையோ, கடன் வாங்கியாவது ஷாப்பிங் செய்யவேண்டும் என்ற நுகர்வு கலாச்சார மனநோயால் (அப்ளூயன்சா) பாதிக்கப்பட்டிருக்கிற 80 சதவீத நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து அவர்களை ஒட்டு மொத்தமாக உறிஞ்சிக் குடிப்பதற்கு முதலாளி வர்க்கத்தோடு சேர்ந்து பத்ரியும் துடிக்கிறார். சும்மாவா தேசத்தின் பொருளாதார வளர்ச்சியாயிற்றே!! தேசபக்தி என்று வந்து விட்டால் பத்ரியை யாராலும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது -ஆமாம்.
பத்ரியை யாரும் தவறாக எண்ணக் கூடாது. நடுத்தரவர்க்கத்தின் நுகர்வுக்கு ஆதரவாக வட்டியை குறைக்கச் சொன்னது கூட உழைக்கும் மக்களின் நலனுக்காகத்தான் என்பதை தனது கட்டுரையில் பின்வருமாறு கூறுவதன் மூலம் நிரூபிக்கிறார் !
கடனுக்கான வட்டி குறைந்தால், பணத்தை கடனாக வாங்கிச் செலவழிக்கப் பலர் நினைப்பார்கள். அப்போது தான் டிமாண்ட் அதிகமாகும், விற்பனை அதிகமாகும், தொழில்துறை அதிக உற்பத்தியைச் செய்யும். அவர்களுக்குக் கிடைக்கும் கடனுக்கான வட்டியும் குறைவாகவே இருக்கும், எனவே தொழில்துறை இலாபம் அதிகரிக்கும். தொழில்துறை இலாபம் அதிகரித்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பல இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கும், மாத வருமானம் கிடைக்கும். 
 ஆக திருவாளர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் நோக்கம் எல்லாம் பல இளைஞர்களுக்கு மாத வருமானம் கிடைக்கச் செய்வதேயாகும் !. தலையை சுற்றி மூக்கைத் தொடுவதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? ஆனால் இது அதுவல்ல. இது கவட்டைக்குள் புகுந்து மூக்கை தொடும் அதைவிட எளிய முறை! தொழில் துறை வளர்ச்சி, தேசபக்தி என்ற வகையில் இதையும்  நாம் ஆதரித்தே ஆக வேண்டும்.
பத்ரியின் மற்றுமொரு அரிய கண்டுபிடிப்பை கட்டுரையின் மற்றொரு பகுதியில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். அது என்னவென்றால் தொழில்துறையில் முதலாளிகளுக்கு இலாபம் அதிகரித்தால் வேலை வாய்ப்பும் மாத வருமானமும் பெருகுமாம். எந்த ஊரில் முதலாளிகள் இலாபத்திலிருந்து சம்பளம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தொழிலாளர்களின் சம்பளத்தை அடக்கவிலையில் சேர்த்து அதற்கு மேல் (30 300 சதவீத)இலாபம் வைத்து சுரண்டுகிறார்கள் என்பது தான் உண்மை.
தொடர்ந்து தனது கட்டுரையில் பல பொருளாதார வியாக்கியானங்களை பொழிந்து விட்டு அடுத்ததாக பண வீக்கத்தைப் பற்றி அலசுகிறார். பணவீக்கத்திற்கான முக்கிய காரணங்களாக உற்பத்தி குறைவு, பெட்ரோல் விலை அதிகரிப்பு, அரசின் செயலற்ற தன்மை மற்றும் மானியம் என்ற பெயரில் மக்களுக்கு நிறைய பணத்தைக் கொடுத்தல் ஆகியவற்றை முன் வைக்கிறார் நம்ம பத்ஸ்.
உற்பத்தி குறைவிற்கான காரணம் பற்றி ஏற்கனவே வியாக்கியானம் செய்து களைப்புற்றதால் அடுத்ததாக கச்சா எண்ணெய் இறக்குமதியை ஒரு பிடி பிடிக்கிறார். மத்திய மாநில அரசுகளின் அதிக வரி விதிப்பே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம். அரசு செய்ய வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும். அப்படிச் செய்தால் முதல் சில மாதங்களுக்கு நட்டம் ஏற்பட்டாலும் பெட்ரோல் டீசல்,  புழக்கம் அதிகரித்து அதன் மூலம் தொழில்துறை பெருகி அதன் மூலம் அரசிற்கு வேறு விதமாக வருமானம் வந்து சேரும். எனவே பெட்ரோல் டீசல் வரியை குறைக்க வேண்டும் என்பது அவரின் அடுத்த வாதம்.
நாடே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தான் கூறுகிறது. வரி குறைப்பின் மூலம் தொழில் துறை எப்படி வளரும் என்பது குறித்து சிந்தித்து கணிணி பொத்தான்களில் தொப்பியிருப்பது தான் பத்ரியின் சிறப்பு. ஆனால் ஒரு சின்ன நெருடல். பெட்ரோல் டீசல் வரியைக் குறைத்தால் அதன் மூலம் தொழில் வளம் பெருகி முதலாளிகள் போடும் பிச்சையில் நாடு முன்னேறும் என்ற கவட்டை வழி மூக்கு தொடும் பாதையை எல்லாம் சிந்திக்கத் தெரிந்த பத்ரிக்கு எண்ணெய் நிறுவனங்களை ரிலையன்ஸ், டாட்டா போன்ற கொள்ளையர்களிடமிருந்து பறித்தெடுத்து அரசே நடத்தினால் மேலும் கனிசமான அளவுக்கு விலை குறையுமே”  என்கிற சிந்தனை ஏன் வரவில்லை ?
இந்த தேசத்தின் முதுகெலும்பான விவசாயத்தின் மீதும், விவசாயிகளின் மீதும் பத்ரி கொண்டுள்ள அன்பை அந்தக் கட்டுரையில் தொடர்ச்சியாக காணலாம். கிட்டத்தட்ட A4 சீட்டில் 3 பக்க அளவிற்கு விவசாய நிலைகள் மற்றும் அரசின் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள் குறித்து கண்ணீர் வடித்துள்ளார் இந்த முத(லை)லாளி
அந்த 3 பக்கத்தின் சாரத்தை பார்த்தோமானால் பத்ரியைப் பார்த்து 3 படத்தின் அந்தப் பாடலைத் தான் பாடத் தோன்றுகிறது. அதில் சாராம்சமாக அவர் சொல்லவருவது என்னவென்றால் விவசாயம் என்பது நமது நாட்டில் நலிவடைந்து வருகிறது. அதற்கான காரணம், விவசாய கூலிகள் கிடப்பதில்லை. இன்னும் 18ஆம் நூற்றாண்டு விவசாய முறையே இங்கு பின்பற்றப் படுகிறது. இந்த விவசாயத்துறையின் கட்டுமானத்தையே மாற்ற வேண்டும். 1 ஏக்கர், 2 ஏக்கர் கொண்டு செய்யபடும் சிறு விவசாயம் என்பது இனி செல்லுபடியாகாது. பெரிய நிலங்களில் நவீன முறைப்படி செய்யப்படும் விவசாயமே இனி செல்லுபடியாகும் என்பது தான்.
நமது வருங்கால நிதியமைச்சர் (நம்ம பத்ரி) மறைமுகமாக கூறவருவது என்னவெனில் சிறு சிறு விவசாய நிலங்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக அழித்து விட்டு (அடிமாட்டு விலையில் வாங்கி) பெரும் தனியார் விவசாயப் பண்ணைகளை உருவாக்கி விவசாயிகளை விவசாயக் கூலிகளாக, நகரத்திற்கு அடிமாட்டு கூலியில் வேலை செய்ய இடம்பெயர்பவர்களாக, உரிமைகள் ஏதுமற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான்.
விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பத்ரி உர விலையை ஏற்றும் தனியார் நிறுவனங்களைப் பற்றியோ அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்று விவசாயிகள் வாயிலும் வயிற்றிலும் அடிக்கும் நாசக்காரர்கள் பற்றியோ கிராமப்புறங்களில் நிலவும் கந்து வட்டி கொடுமை பற்றியோ இவற்றின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் பற்றியோ, விவசாயம் செய்யவியலாமல் அடிமாட்டு விலைக்கு நிலத்தை விற்று விட்டு மிகக்குறைவான கூலிக்கு நகரத்தை நோக்கி நகர்வதைப் பற்றியோ சிந்திக்காமல் விட்டிருப்பது ஏன் ? தேசபக்தி போதை ஏறினால் இவற்றையெல்லாம் அதாவது தேசத்தின் மக்களை எல்லாம் மறந்துவிடுவார்கள் போலும்.
பத்ரியின் மற்றொரு கண்டுபிடிப்பும் அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. அதாவது 100 நாள் வேலைத்திட்டம் சோம்பேறிகளை உருவாக்கும் திட்டம் என்பது தான் அது. அதாவது 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த அரசாங்கம் மக்களுக்கு இங்கிருக்கும் மண்ணை வெட்டி அங்கே கொட்டுவது, பின்னர் அங்கிருக்கும் மண்ணை வெட்டி இங்கே கொட்டுவது போன்ற சப்பை வேலைகளுக்கெல்லாம் காசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்படி உழைப்பில்லாமல் சம்பாதிக்கும் காசால் மக்கள் அனாவசியமாக செலவழிக்கின்றனர். இதனாலும் பணவீக்கம் ஏறுகிறது என்று வருத்தப்படுகிறார் இந்தப் பொருளாதாரப் பிலி.
சிறு விவசாயிகளை ஓட்டாண்டியாக்கி, அவர்களை நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்று ஓடச் செய்து விவசாயத்தை ஒட்டு மொத்தமாக தனியார் பண்ணைகள் கையில் ஒப்படைக்கவே, இந்த 100 நாள் வேலைத்திட்டம், மக்கள் விரோதியான காந்தியின் பெயரில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்ற உண்மையை அறியாமலிருந்தாலும், விவசாய கால்வாய் வெட்டுதல், தூர் வாருதல் மற்றும் கட்டுமானப் பணிகளை தனியார், பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்த முறையில் கொடுக்காமல், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களிடம் கொடுக்கலாம் என்று கூட திருவாளர் பத்ரி பேச மறுக்கிறார். மக்கள் சோம்பேறிகளாகி விடுவார்கள் என்றும் உழைக்காமல் சம்பாதிக்கிறார்கள் என்றும் எழுதும் பத்ரிக்கு தமது தொப்பையைப் பார்த்தாவது உழைக்காமல் கொழுத்துத் திரியும் முதலாளிகள் பற்றி ஞாபகத்தில் வந்திருக்க வேண்டுமே? ஏன் வரவில்லை என்றும் தெரியவில்லை.
இதில் ஏழைகளுக்கு அரசு பொக்லைன் இயந்திரங்களை ஓட்ட கற்றுத்தரவேண்டும் என்றொரு கோரிக்கையும் வைக்கிறார் பத்ரி. அங்கிருக்கும் மண்ணை வெட்டி இங்கே போட இங்கிருக்கும் மண்ணை வெட்டி அங்கே போட எதற்கு பொக்லைன் இயந்திரங்கள் ?
சாராம்சமாக பத்ரி கவட்டை புகுந்து கூறவருவது , சிறு விவசாயம் சாத்தியமற்றது. பெரும் தனியார் பண்ணைகளை உருவாக்கிவிட்டால் மட்டுமே விவசாயத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். 100 நாள் வேலைத்திட்டம் மக்களை சோம்பேறியாக்குகிறது. அரசாங்கத்தின் பணம் விரையமாகிறது. அதனால் அதனை நிறுத்திவிட்டு கிராமப்புற ஏழைகளை நகரத்தை நோக்கி அடிமாட்டுக் கூலிக்கு வேலைக்கு அலைபவர்களாக மாற்ற வேண்டும் என்பதே.
அடுத்தது மறைமுக வரிகள் குறித்து ஸ்வாமிகளின் வியாக்கியானம் பற்றி பார்க்கலாம். மறைமுக வரிகள் அதிகம் இருப்பதால், இரு சக்கர வாகனங்கள், நாற்சக்கர வாகனங்கள் விற்பனை குறைந்து விடும். அதனால் மறைமுக வரியை ரத்து செய்ய / குறைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் தொழில் நிறுவனங்களுக்கு இலாபம் கிடைக்கும். இந்திய தொழில் வளர்ச்சி பெருகும் என்கிறார் பத்ரி.  
மறைமுக வரிகள் மக்களை உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியத் தேவைகளை வாங்க வக்கற்றவர்களாக மாற்றுகிறது என்று நாம் வருத்தப்படுவதற்கும், முதலாளியின் இலாபம் எவ்வாறு குறைக்கிறது என்பதைப் பற்றி பத்ரி வருத்தப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
கட்டுரை முழுவதும் முதலாளிகளின் இலாபத்திற்கு குறைவில்லாத ஒரு சூழ்நிலை இருக்க வேண்டிய அவசியம் பற்றி கவலைப்படும் பத்ரி, தனது தூக்கத்திலும் முதலாளிகளின் நன்மைக்காகவே கனவு காணும் காங்கிரசை கடைசியில் சாடியிருப்பது தான் கட்டுரையில் நெருடலான விசயம். மாண்டேக் சிங் அலுவாலியா வகுத்துத் தந்த திட்டத்தை இம்மி பிசகாமல் குஜராத்தில் நிறைவேற்றி வருகிறார் இவரது ஆதர்ச புருசன் நரேந்திர மோடி. மோடியை நேசிக்கும் இவருக்கு மாண்டேக்சிங் அலுவாலியா மீது ஏன் வெறுப்பு என்பதைக் கண்டுபிடிப்பதில் நமக்கு சிறிது சிரமம் இருக்கிறது என்றாலும், பகிரங்கமாக ஏழைகளுக்கு எதிராக அறிக்கை விட்டு வரும் மாண்டேக் சிங் அலுவாலியாவை ஆதரிப்பது என்பது என் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற தனது ஏகாதிபத்தியதாசத்தனம் பகிரங்கமாக வெளிவரும் என்ற பயத்தில் கூட அவ்வாறு செய்திருக்கலாம் என்று ஒருவாராக புரிந்து கொள்ளலாம். தவிர முதலாளிகளின் கட்சியான காங்கிரசை பத்ரி சாடியதற்கு காரணம், பாஜக மீதான பார்ப்பனப் பாசம் தான் என்பது அவரது மற்ற கட்டுரைகளிலிருந்து தெரிகிறது. நரேந்திர மோடியின் பெயர் குஜராத் படுகொலைகளில் அடிபட்டாலும் அவர் குஜராத்தில் கொண்டு வந்திருக்கும் வளர்ச்சிப் பணிகளைப் பாராட்டி மோடி பிரதமராக பத்ரி ஆதரவு வழங்குவாராம் !. ஒரு வேளை தன் வீட்டின் இளங்கன்றை துடிக்க துடிக்க அவித்துத் திண்றவனைக் கூட தொழில் வளர்ச்சியைப் பெருக்கியவன் என்ற ஒரே தகுதிக்காக பிரதமராக்கி அழகு பார்க்கும் தேசபக்தி பத்ரிக்கு மட்டும் தான் உண்டு போலும். 
இவ்வளவு தீவிரமாக இந்திய பொருளாதார மந்த நிலை குறித்தும் பணவீக்கம் குறித்தும் விவசாயிகள் நிலை குறித்தும் வருத்தப்பட்டு எழுதும் பத்ரிக்கு இதே காங்கிரசு அரசு பாஜகவின் ஆதரவோடு மக்களின் வரிப்பணத்தை உலகமயம் , தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளின் கீழ் கொள்ளையடித்தது பற்றியும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவு குறித்தும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்நிலை தாழ்ந்தது குறித்தும் எழுத மனம் வரவில்லை போலும்.
வங்கி வட்டி விகிதத்திலிருந்து ரிசர்வ் வங்கியின் ஒவ்வொரு பொருளாதார நடவடிக்கை வரையிலும் அனைத்தையும் விமர்சிக்கும் அளவிற்கு தகவல்களை திரட்டி வைத்திருக்கும்
பத்ரிக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கிங்ஃபிசர் விஜய் மால்யா, அம்பானி குடும்பம், டாட்டா, ஆதித்யா பிர்லா போன்ற தரகு முதலாளிகள் கடன் வாங்கி விட்டு திரும்பத் தராமல் ஏப்பம் விட்ட சில இலட்சம் கோடி கடன்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காதது ஆச்சரியம் தான்.
ஒருவேளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக்கடன்கள் தேசிய பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியாக இருக்குமோ ? அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் விடுவதால் அந்நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று அதன் மூலம் அரசாங்கத்திற்கு இன்னும் அதிக வருமானம் வரும் என்ற அக்கரையினால் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரோ ?..
இந்திய தரகு முதலாளிகளுக்கும் , அந்நிய முதலீட்டாளர்களுக்கும் வரிவிலக்கு, மானியம் என்ற பெயரில் ஆண்டு தோறும் பட்ஜெட்டில் 5 இலட்சம் கோடி ரூபாயை ஒதுக்குவதைப் பற்றியோ, இருக்கும் ஆயுதங்களுக்கு வெடிகுண்டோ தோட்டாவோ வாங்காமல் புதிது புதிதாக இயக்கத்தெரியாவிட்டாலும் வாங்கிக் குவிக்கும் இராணுவத் தளவாடங்களுக்கு ஆண்டுதோறும் அரசு செலவழிக்கும் 2 இலட்சம் கோடி ரூபாய் குறித்தோ, அடுக்கடுக்காக இந்திய கடல் எல்லைப் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் அணு உலைகளை நிறுவ போடப்பட்டிருக்கும் 25 இலட்சம் கோடி மதிப்பிலான அணுவுலைகள் வாங்கும் திட்டம் பற்றியோ மவுனம் சாதிப்பது ஏன் ?.. இந்திய தேசிய பொருளாதார வளர்ச்சியின் மீது காதல் கொண்டிருக்கும் அதே வேளையில், இத்தகைய மக்கள் விரோத செலவுகள் மீதும் கொண்ட கள்ளக்காதல் தான் பத்ரியின் மவுனத்திற்கு காரணமா ?.
மண்ணெண்ணை, டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றிற்கு இந்த அரசாங்கம் வழங்கும் கொஞ்ச நஞ்ச மானியத்தையும் பார்த்து பெருமூச்சு விடும் பத்ரிக்கு, கிருஸ்ணா கோதாவரி ஆற்றுப்படுகைகளில் கிடைக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற தேசிய வளங்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்தது பற்றியும், NTPC என்னும் மத்திய அரசு நிறுவனத்திற்கு கொள்ளை இலாபத்திற்கு அதே எரிவாயுவை ரிலையன்ஸ் விற்றது பற்றியும், அதே போல் இந்தியாவின் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சல்லீசான விலையில் அள்ளி அள்ளி தாரைவார்த்து விட்டு அதே நிறுவனத்திடம் இருந்து அதிக விலை கொடுத்து உலோகங்களை வாங்குவது பற்றியும் அவற்றால் அரசிற்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்புகளை பற்றியும் ஏனோ மறந்து விட்டது போலும்.
பொருளாதாரத்தை விளக்குகிறேன் பேர்வழி என்ற பெயரில் உழைப்பவர்களுக்கு எதிரான, உட்கார்ந்து தின்று கொழுக்கும் முதலாளிகளுக்கு ஆதரவான கட்டுரைகளை எழுதிக் குவிக்கும் பத்ரியை கண்டிப்பாக நாம் இனம் காண வேண்டும். அக்கட்டுரையின் பின்னூட்டத்தில் இருக்கும் பல அம்பிகளின் வன்மமும், அதனை அறியாமல் அருமை பெருமை என்று பாராட்டும் நடுத்தவரக்கத்தினர் சிலரையும் பார்த்த போது கண்டிப்பாக எழுத வேண்டிய அவசியத்தை உணர்ந்ததாலேயே இந்த எதிர்வினை எழுதப்பட்டது. 
அம்பி பத்ரி! இனியாவது பொருளாதாரக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன் அதியமான் போன்றவர்களிடம் விவாதித்து விட்டு எழுதுங்கள். எப்படி லின்க் போட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்பதை அவர் சொல்லித்தருவார். அதோடு கம்யூனிஸ்ட்டுகளை சமாளிக்க டிப்சும் கொடுப்பார்.

Monday, May 21, 2012

வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் !! ..

நண்பர்களே, தோழர்களே , வெகு நாட்களாக பதிவுகள் எதுவும் எழுதாமல் இருந்து விட்டு, அதன் தவறை உணர்ந்து மீண்டும் பதிவுகள் எழுத வந்திருக்கிறேன்.

ஏற்கனவே எழுதிய கட்டுரைகளைப் போன்ற வீச்சான, அதை விடக் கூர்மையான அரசியலைக் கொண்டதாக படைப்புகள் அனைத்தும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு, உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

விவாதங்களில் பங்கேற்று ஆதரவு தாருங்கள்!

நன்றி,
செங்கொடி மருது

Thursday, October 14, 2010

மகாத்’தூ..’ மா ... காந்திக்கீ.... சே....

ஏற்கனவே இந்த அயோக்கியன் காந்தியைப் பற்றி அறிந்திருந்தாலும் ஆதாரப் பூர்வமாக எதுவும் இல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்..


இதோ ... அந்த உத்தம சீலரின் வாழ்வை கிழித்து தொங்க விட்டிருக்கிறார்கள் .. சர்வதேசிய வாதிகள் . வெகு நாட்களுக்குப் பிறகு பதிவிடுகிறார்கள் எனினும் மிகவும் பயனுள்ள பதிவு.

ப்திவுக்கான சுட்டி இதோ கீழே ..

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் களர் நிலம்..


நண்பர்கள் படித்து பயன்கொள்ளவும் ..

Friday, October 8, 2010

எக்காளமிடும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளே ..

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களது புரட்சிகர திருமணத்தைப் பற்றி அண்மையில் வினவில் இடப்பட்டிருந்த இடுகையிலும், தங்களது வலைப்பூவிலும் எக்காளமிட்ட மத அடிப்படைவாதிகளுக்கான பதிவு இது.


வினவு வலைத்தளத்தில் ’புதிய ஜனநாயகம்’ பத்திரிக்கையில் அரைப்பக்க செய்தியாய் வந்திருந்த ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தோழர்களின் புரட்சிகர திருமணத்தைப் பற்றிய பதிவின் பின்னூட்டத்தில் ஒரு பெரிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் படையே வந்து வாதிட வந்தது. பொதுவாக இந்தப் படையானது இந்துப் பார்ப்பனியத்திற்கு எதிராக வினவு மற்றும் மற்ற வலைத்தளங்களில் இடப்படும் இடுகைகளை சந்தோசமாக ரசித்து வாசித்து விட்டு, அதே சமயத்தில் இஸ்லாமை விமர்சித்தால் மட்டும் ‘குய்யோ’ ‘முறையோ’ என்று ஓலமிடும். ஆனால் எந்த காரணத்தினாலோ பாவம் இந்தப்படை மற்ற பொதுவான மக்கள் பிரச்சனைகளுக்கு தங்கள் குரலை கொடுக்க என்றும் முன் வந்ததில்லை.



சரி, விசயத்திற்கு வருவோம். தவறான செய்திக்கு புதிய ஜனநாயகத்தில் வருத்தம் தெரிவிக்கப்படும் என்று கூறிய பிறகும் இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு மனம் ஆறவில்லை. ஐயோ பொய்.. ஐயோ பொய்.. என்று ஊளையிடுகின்றனர். பகுத்தறிவை மத உணர்வு எப்படி மழுங்கடிக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்..  பொய் சொல்ல வேண்டிய அவசியம் வினவுக்கு என்ன இருக்கிறது என்று சிந்திக்கவே மாட்டார்களா இவர்கள்?..



இஸ்லாமியர்கள் பொதுவாக மதப் பற்று அதிகம் உள்ளவர்கள். அவர்களின் மத்தியில் இருந்து ஒரு ஆணும் பெண்ணும் மதம் என்னும் சிறிய வட்டத்தை விட்டு வெளியே வந்து மக்களுக்காக போராட தங்களை ஆயுத்தப் படுத்திக் கொண்டனர் என்பது தான் அந்தக் கட்டுரையில் முக்கியமாக பதியப்பட்டிருக்கிறது. மேலும் அந்தப் பதிவில் இஸ்லாமியர்களை எந்த விததிலும் தாக்கவில்லை.



இஸ்லாமிய அமைப்புகளில் ஏதோ ஒன்றில் மணமக்களின் தந்தை இருந்தார் அல்லது இருக்கிறார் என்பது குறித்து சர்ச்சையான தகவலை புதிய ஜனநாயகம் வெளியிட்டாலும் ஜனநாயக முறைப்படி அது தவறு என்பதை வினவு வெளியிட்டிருந்தது.

பதிவின் முக்கிய செய்தியான புரட்சிகரத் திருமணத்தை விமர்சிக்க வக்கில்லாமல் தவறான தகவல் என்ற ஒன்றை மட்டுமே பற்றிக் கொண்டு ’பொய், பொய்’ என்று இவர்கள் ஊளையிடுவதற்குப் பின்னனியில் தங்கள் மதத்திற்கு கரசேவை செய்ய ஒரு ஆள் குறைந்து விட்ட கவலையில் கொக்கரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு சிறிதும் சளைத்தவர்களில்லை இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.



இஸ்லாமிய அடிப்படைவாதிகளே, உங்களிடம் நாங்கள் கேட்பது இவை தான். புரட்சிகரத் திருமணம் தாலி இல்லாமல், எந்தவிதமான மத அடையாளங்களும் இல்லாமல் நடந்ததில் இஸ்லாமிற்கோ அல்லது இஸ்லாமிய கொள்கைகளுக்கோ ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விட்டதா ?.


வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய நபிகள் கூறினார். வட்டிக்கு விடக்கூடாது என்றும் கூறினார். சாதி பார்க்கக் கூடாது என்று நபிகள் கூறினார்.

ஆனால் இதை எல்லாம் எத்தனை இஸ்லாமியர்கள் இன்றுவரை ஒன்று விடாமல் பின்பற்றி வருகிறார்கள்?.. மனசாட்சியைத் தொட்டு பதில் கூறவும். நபிகள் சொன்னபடி வாழ வக்கில்லாத அவர்களைக் கூட தர்காவிற்கு வந்து போவதால் நீங்களும் இஸ்லாமியர்களாக ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் நபிகள் மொழிந்த நற்பண்புகள் அனைத்தையும் பின்பற்றி, அதற்கும் ஒருபடி மேலே பெண் அடிமைத்தனத்தை எதிர்த்தும் நடத்தப்பட்ட புரட்சிகரத் திருமணம் உங்களுக்கு கசக்கிறது என்றால் உங்களுக்கு நபிகள் என்ன தேர்தல் நேரத்தில் செயலலிதாவிற்குத் தேவைப்படும் எம்.ஜி.ஆர். போலவா?. என்ற சந்தேகமே வலுக்கிறது.

அதே நபிகள் சொன்னபடி வரதட்சணை வாங்கமாட்டோம், உழைக்காமல் உண்ண மாட்டோம் என்ற உறுதியோடும் உழைக்கும் மக்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அந்த இளம் தோழர்களின் திருமணத்தை வாழ்த்தக்கூட உங்களுக்கு மனம் வரவில்லை என்றால், நீங்கள் ஒரு இஸ்லாமியராக அல்ல ஒரு மனிதராகக் கூட இருக்கத் தகுதி இல்லாதவர்கள். நபிகளின்பெயரைச் சொல்வதற்குக் கூட உங்களுக்கு அருகதை கிடையாது.


நான் ஒரு இஸ்லாமியன் என்று கூறிக் கொண்டு தனது மததிலேயே இருக்கும் அவலங்களைக் கண்டு கொள்ளாது வியாக்கியானம் பேசும் அடிப்படைவாதிகளே.. நபிகளின் சிறந்த போதனைகளையும் இன்னபிற முற்போக்கு கொள்கைகளையும் பின்பற்றும் கம்யூனிஸ்ட்டை விட வரதட்சணை வாங்கிக் கொண்டு, வட்டிக்கு விட்டுக் கொண்டு(நேரடியாகவோ, மறைமுகமாகவோ), சாதி பார்த்துக் கொண்டு இருக்கும் இஸ்லாமியனே மேலானவன் என்று நம்பும் பரிதாபத்திற்குரியவர்களே.. மக்களுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து தமது குடும்பத்தையும் அந்த வாழ்வில் ஈடுபடுத்தி வாழும் நக்சல்பாரிகளை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?..



இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் வந்து பதிவில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் செல்லமாட்டீர்கள் அல்லவா இஸ்லாமிய அடிப்படைவாதிகளே ?.. ..

Friday, October 1, 2010

ராமனுக்கே மயிர் பிடுங்கிய அலகாபாத் நீதிமன்றம்..

வழக்கமாக இந்திய குடுமிமன்றங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளில் தனது ’பாரம்பரிய’ காவி உடை அணிந்து தான் தீர்ப்பு சொல்லும்.
நேற்றும் அது ஒன்றும் தனது பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காத வண்ணம் அயோத்தி நிலப் பிரச்சனையில் தீர்ப்பு கூறியுள்ளது.

அயோத்தி நிலப் பிரச்சனை பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இழுவையில் இருந்து தீர்ப்பு வரப் போகிறது என்று தெரிந்ததும் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.  உச்சநீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்து பின்னர் தடை நீக்கப்பட்டு கடைசியாக நேற்று வாய்மல(ம்)ர் திறந்தனர் நீதிபதிகள்.
இந்த 3 பேர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்சு அளித்த தீர்ப்பில் அனைவரையும் ‘’ஹிந்து’யன்’ என்று உணரவைக்கக் கூடிய அளவிற்கு ஒரு உன்னதமான தீர்ப்பை வழங்கியது. அதை இந்த ஹிந்துய நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. என்ன தீர்ப்பு அது ?..



காவிபதிகளான நீதிபதி சர்மாவும் அகர்வாலும் அது இராமன் பிறந்த இடம் என்பதால் அந்த கட்டிடத்தின் மையப் பகுதியை இந்துக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும், மீதி இருக்கக் கூடிய பகுதிகளை மூன்றாகப் பிரித்து வக்பு வாரியத்துக்கும் ,ராம் ஜென்ம நியாசுக்கும், நிர்மோகி அகாரா என்ற இந்து கைகூலிக்கும்தர வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொறிநாய்களும் வெறி நாய்களும்

முதலில் இராமன் என்றொரு அயோக்கியன்(* மாற்றப்பட்டுள்ளது) பிறந்தானா இல்லையா என்பதற்கே இங்கு ஆதாரமில்லை. இரண்டாவது அயோத்தியில் அவன் அந்த இடத்தில் தான் பிறந்தான் என்பதற்கும் இங்கு ஆதாரமில்லை. 1949இல் இதே ஆர்.எஸ்.எஸ் தான் அங்கு ராமர் சிலையை வைத்தது ,அதற்கு முன்னாள் அங்கு இராமன் சிலை கூட இல்லை என்பது உலகறிந்ததே.

பாபர் அயோத்தியில் கோவிலை இடித்து மசூதி கட்டினார் என்பதால் மசூதி இந்துக்களுக்கு சொந்தம் என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதாரமில்லாத ஒரு கேவலமான வாய்ச்சொல்லை இந்து மக்களின் நம்பிக்கையின் குரலாக ஏற்றுக்கொண்டு இவ்வளவு கேவலமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

இந்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இந்த தீர்ப்பை குடுமி மன்றம் வழங்கி இருக்கிறது என்றால் காஷ்மீர் மக்களின் நம்பிக்கைக்கும் அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆதாரத்துக்கும் பாத்திரமாக காஷ்மீரை விடுதலை செய்து ’இந்து’ய நீதிமன்றம் தீர்ப்பெழுதுமா ?.


வீட்டின் முன் குப்பை கொட்டப்படாமல் தடுக்க விநாயகர் சிலை வைத்திருக்கும் பக்தர்களே .. சாக்கிரதையாக இருங்கள் .. ஒரு காலத்தில் விநாயகர் இங்கு தான் கக்கா போனார் என்று யாரேனும் கேஸ் கொடுத்தால் உங்கள் வீடு இரண்டாகவோ, மூன்றாகவோ கூறு போட்டு காவாளிகளுக்கு  குடுமி மன்றத்தால் பிரித்துத் தரப்படும்.

இதுக்கு பேர் தான் மதச்சார்பற்ற இந்திய சனநாயகமாம் .... தூ ....

Monday, September 27, 2010

பொங்கி வந்த பாலில் உச்சா போன உச்சநீதிமன்றம்!!


அலகாபாத் நீதி மன்றத்தில் அயோத்தி பாபர் மசூதி இடப் பிரச்சனைக்கு தீர்ப்பு என்னும் பால் பொங்கி வரும் வேளை ...அந்த தீர்ப்பின் எதிரொலியாய் இந்துத்துவப் பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்நோக்கி உத்திரப் பிரதேச அரசும் இந்தியத்திரு நாட்டில் இந்து முன்னனி, விசுவ ஹிந்து பரிசத்,சங்பரிவார் போன்ற வைரஸ்களின் தாக்குதலுக்கு உட்பட்ட அனைத்து மாநில அரசுகளும் தனது அடக்குமுறைக் கருவிகளை துரிதமாய் முடுக்கி விட்டிருக்க இந்தியாவின்  உச்சநீதிமன்றம் திடீரென்று தனது சமாதானச் சிறுநீரைப் பெய்து அலகாபாத் நீதிமன்றத்தில்  தீர்ப்புப் பால் பொங்குவதை தள்ளிப் போட்டிருக்கிறது.
உலக அரங்கில் இந்தியாவின் புகழ் இதோ ’உச்சா’த்தில்

இந்த தீர்ப்பு கண்டிப்பாக அத்வானி போன்ற காவாளிகளுக்கு பாதகமாக வரும் என்று தெரிந்து கொண்டு இந்த அயோக்கியர்கள் உச்சநீதி மன்றத்தில் வைத்த கோரிக்கை தான் அமைதியாக பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது. இந்த வேண்டுகோளுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி ரவீந்திரன் பின்னர் சக நீதிபதி கோகலே சொன்னபடியே வழக்குத் தீர்ப்பை தள்ளிப் போட உத்தரவிட்டுள்ளார்.

இதில் தனது முக்கியமான துருப்புச் சீட்டான அயோத்தி கை விட்டுப் போய்விடும் என்ற பீதியில் இருந்த பிஜேபி, வி.ஹெச்.பி, போன்ற இந்துத்துவப் பயங்கரவாதிகள் மட்டும் தான் உச்ச நீதி மன்றத் தடையை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள் என்றால் காங்கிரஸும் தனது இந்து மனசாட்சியை .. இந்தத் தடையை வரவேற்பதன் மூலம் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

இந்திராகாந்தி இராஜீவ்காந்தியின் வரிசையில் அடுத்ததாகக் காத்திருக்கும் ராகுல்காந்தியும் தனது தனிப்பட்ட கருத்தை ஒரு ஐ.ஐ.டியில் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். அதாவது இவருக்கு பாபர் மசூதி இடப் பிரச்சனையை விட நாட்டில் முக்கியமான பிரச்சனை நிறைய இருக்கிறதாம். இவன் அப்பன் செத்ததை விட நாட்டில் பெரிய பிரச்சனை நிறைய இருக்கத்தான் செய்கிறது. அதற்காக எதுவும் செய்யாமல் இருந்துவிட்டான்களா  என்ன ?..  பி.ஜே.பி., வி.ஹெச்.பி போன்ற கொடுங்கோலர்கள் எப்படியும் தீர்ப்பு வந்த பின் ஒரு ஆட்டம் ஆடுவார்கள் மேலும் அந்த ஆட்டத்தைக் கொண்டு  இந்து மனசாட்சியுடன் இருக்கும் அனேக இந்திய மக்களின் முட்டாள் மனத்தை மழுங்கடித்து வசீகரிக்க முயலுவார்கள் என்ற பீதியில் காங்கிரஸ் இந்த வழக்குத் தீர்ப்பை விரும்பவில்லை.
அதெல்லாம் சரிதான் ... ஆனால் எந்த பக்கமும் சாயாத(!!) நீதிபதிகள் ஏன் இந்த தீர்ப்பு வருவதை விரும்பவில்லை என்று தெரியவில்லை.

இந்த வழக்கில் சமரசம் என்பது நகைச்சுவையான விசயமே .. இது என்ன சொத்து பிரிப்பு வழக்கா  ?.. இல்லை விவாகரத்து வழக்கா ?.. சமரசப் பேச்சுவார்த்தைக்கு போவதற்கு ?.. அயோக்கிய நாய்களான இந்துத்துவ வெறியர்கள், தொல் பொருள் ஆராய்ச்சி இல்லாமலேயே ராமர் அடித்த மூத்திரத்தை முகர்ந்து பார்த்து இங்கே தான் ராமர் மூச்சா போனார் என்று கூறி 1992ம் ஆண்டு கரசேவை நடத்திய பிறகு  எத்தனைக் கொலைகள், கலவரங்கள்?.. எத்தனை உயிர்ச்சேதங்கள்?.. எவ்வளவு பொதுச்சொத்து சேதங்கள்?.. இதற்கெல்லாம் காரணமான இந்த நாய்களை தூக்கிலிட்டாலும் தகும் .. இந்த வழக்கில் இந்திய உச்ச குடுமி மன்றம் செய்துள்ள அறிவுரை - பேச்சுவார்த்தை. இதே நீதிமன்றம் கசாப் வழக்கிற்கும் பேச்சுவார்த்தைக்கு பரிந்துரைத்திருக்கலாம். இந்திராகாந்தி கொலை வழக்கு , இராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் பேச்சுவார்த்தைக்கு வழிகோலி தீர்ப்பை தள்ளி வைத்திருக்கலாம். ஆனால் இவ்வழக்கில் மட்டும் ஏன் தள்ளிவைத்திருக்கிறது என்று தெரியவில்லையா ?. அது வேறு ஒன்றும் இல்லை... இங்கு ஊறி வழியும் இந்து மனசாட்சி தான்.


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிபதி லிபரான் விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றவாளிகளில் முக்கியமானவர்களின் விவரம் வருமாறு 

1.     அசோக்சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
2.     உமா பாரதி (விஸ்வ ஹிந்து பரிஷத்)
3.     பால் தாக்கரே (சிவசேனா)
4.     பிரமோத் மகாஜன் (பாஜக, காலமாகிவிட்டார்)
5.     பிரவீன் தொகாடியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)
6.     முரளி மனோகர் ஜோஷி (பாஜக)
7.     முன்னாள் துணை பிரதமர் அத்வானி (பாஜக)
8.     முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (பாஜக)
9.     ராம் விலாஸ் வேதாந்தி (சந்த் சமாஜ் தலைவர்)



அந்த படுபாதக செயலுக்கு ஆதாரங்கள் , சுய கொக்கரிப்புக்கள் இருந்தும் இந்த வழக்கு 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப் பட்டு வருகிறது.

ஆனால் இந்த இடம் சம்மந்தப்பட்ட பிரச்சனை 60 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ளது. ராமன் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று சேது சமுத்திரத் திட்டத்தில் ஏற்கனவே தொல்லியல் துறை இவர்களது முகமூடியை கிழித்து தொங்க விட்டு விட்டது. இல்லாத இராமன் பிறந்த பூமி என்று இவர்கள் சொல்வதை ஏற்கப் போகிறதா இந்த நீதிமன்றம்?.. இல்லை வரலாற்றில் இருந்த பாபர் மசூதிக்கு இடத்தைத் தரப்போகிறதா என்ற தீர்ப்பு இப்பொழுது வரக் காத்திருக்கும் வேளையில் உச்ச நீதி மன்றம் திடீரென உச்சா போய் விட்டது. அதுவும் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிற்கே இந்தப்பாடு. அடுத்து மேல் முறையீடு, மயிறு முறையீடு என்று உச்ச நீதி மன்றத்திற்கு போய் தீர்ப்பு வருவதற்குள் இந்த அயோக்கிய நாய்கள் இன்னும் எத்தனை கரசேவையை செய்யக் காத்திருக்கிறார்களோ ?!!..


இன்னுமா இந்த நீதி மன்றங்களையும் பாராளுமன்றங்களையும் நம்பப் போகிறோம்?..

Thursday, September 9, 2010

சுயமரியாதையுள்ள எவரும் காஷ்மீர் போராட்டத்தை ஆதரிப்பர்..

கொழுந்து விட்டு எறிகிறது காஷ்மீர். வீதியில் இறங்கி நின்று கல்லெறியும் மக்கள் ..  5 வயது சிறுவன் முதல் 70 வயது மூதாட்டி வரை கல்லெடுத்து எறிகின்றனர்.


பாகிஸ்தானின் சதி என்றும் ஒரு கல்லெறிக்கு 200 ரூபாய் வாங்கிக் கொண்டு காஷ்மீரிகள் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் உள்துறை அமைச்சகமும் , ஊடகங்களும் புரளிகளைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் சிறிதும் காஷ்மீர் வரலாறு தெரியாமல்
“ காஷ்மிர் இன்னைக்கு விடுதலை கேட்டு கொடுத்துவிட்டால் நாளைக்கு ஒவ்வொரு மாநிலமும் தனித் தனியாக கேட்பார்கள். இப்படி போனா இந்தியானு ஒன்னு இல்லாமலே போகிடும்.  இவனுங்களையெல்லாம் இராணுவத்தை உள்ளே விட்டு சாவடிக்கனும்” என்று புலம்பும் நடுத்தரவர்க்க சீமான்கள் ஒரு புறம் லோலாயி பேசிக் கொண்டு திரிகிறார்கள்.


காஷ்மீர் என்பது தனி நாடாக இருந்தது. அதில் மன்னராட்சி இருந்தது. அங்கு ஒரு இந்து மன்னன் ஆட்சி புரிந்தானர். அவர் சர்வதேச ஆசிய ஜோதி ’மாமா’ ஜவகர்லால் நேருவுடன் ஒப்பந்தம் போட்டு இந்தியாவுடன் இணைந்து கொண்டார்.  அதனால் அது இந்தியாவுக்கு தான் சொந்தம் என்றும் சில அறிவாளிகள் பேசுவதுண்டு. அப்படிப் பார்த்தால் சுதந்திரத்திற்கு முன்பு ஹைதராபாத் பகுதியை இஸ்லாமிய மன்னன் தான் ஆட்சி செய்தான். ஹைதராபாத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்து விடலாமா ?..

இந்து மன்னன் ஆட்சி புரிந்ததால் மதச்சார்பற்ற (!!!!) இந்திய அரசின் கீழ் காஷ்மீர் வருவது நியாயம் என்றால் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானின் கீழ் ஹைதராபாத் வருவது தானே நியாயம்..

மேற்கூறிய மன்னருக்கும் ஜவகர்லால் நேருவுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்பது பாதி உண்மை பாதி பொய்யாகத் தான் இங்கு பரப்புரை செய்யப்படுகிறது.  கஷ்மீரில் சர்வதேச நாடுகளின் முன்னிலையில் காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி வாக்கு எண்ணிக்கைக்குத்  தகுந்தாற் போல் காஸ்மீர் தனி நாடாக இருந்துகொள்ளும் அல்லது இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ அதன் விருப்பப்படி சேர்ந்து கொள்ளும் என்பது தான் அந்த ஒப்பந்ததின் சாரம்.

நேரு மாமா செத்துப் போய் , அவர் மவள் இந்திராகாந்தி  சல்லடையாக துளைக்கப்பட்டு செத்துப் போய், இந்திராகாந்தியின் மகன் இராசீவ் காந்தி அள்ளக்கூட முடியாத மாதிரி செத்துப் போய் இராசீவ் பொண்டாட்டி சோனியாகாந்தி வரைக்கும் ஆட்சி செய்ய வந்தும் இன்னும் அங்கே தேர்தல் நடத்துது இந்திய அரசாங்கம். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ?. அவர்களை இன்று வரை ஏமாற்றி சுரண்டித் திண்ணும் இந்த இந்திய அரசிற்குத் தான் வெட்கம்,மானம் , சூடு, சொரணை இல்லை என்றால் அதை ஆதரிக்கும் நமக்குமா இல்லை.



சரி .. காஷ்மீரை உரிமை கொண்டாடும் என்னருமை இந்தியப் பற்றாளர்களே..

கீழ்காணும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் ..

1)  660 தீவிரவாதிகளின் ஊடுறுவலுக்காக (இந்திய அரசின் கணக்குப் படி) 5,00,000 பாதுகாப்புப் படையினர் அங்கு நிற்பது ஏன்?.. (பாகிஸ்தான் பார்டர் என்பதால் என்று நினைத்தீர்களானால் , அதே பாகிஸ்தான் பார்டரில் வரும் பஞ்சாபில்,குஜராத்தில் அவ்வளவு இராணுவ படைகளைக் குவிக்காதது ஏன்?)

2) அங்கே கடந்த 17 ஆண்டுகளில் மட்டும் பொதுமக்களில் 70,000 பேர் பல்வேறு காரணங்களுக்காக இந்திய இராணுவ மற்றும் இதர பாதுகாப்புப் படைகளால் கொல்லப் படிருக்கிறார்கள். சுமார் 600 தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க இத்தனை பேரைக் கொல்ல வேண்டுமா ?.

3) அங்கு பொதுமக்களில் கிட்டத்தட்ட 8000 பேர் எங்கு போனார்கள் ?.. என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மாயமானதற்கு காரணம் என்ன ?.

4) இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரால் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதற்கு இந்திய தேசியவாதிகள் என்ன பதில் சொல்லக் காத்திருக்கிறார்கள் ?.

5) தனது சொந்தங்களை தனது கண் முன்னேயே இழந்து, தமது வீட்டுப் பெண்களிற்கெதிரான பாலியல் வன்முறைகளைக் கண்கூடாக கண்ட காஷ்மீரிகள் என்ன தான் செய்வார்கள் ? அடக்குமுறை செய்யும் இந்திய அரசாங்கத்தின் கொட்டத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க அவர்கள் என்ன நம்மைப் போன்று அமெரிக்க கலாச்சார மோகத்தால் சுரணை இழந்த  ஜென்மங்களா ?..

6) தெருவில் வந்து கல்லெறிவதையும் தமது நாட்டு சுதந்திரத்திற்காக போராடுவதையும் தவிர அவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் தீர்வு என்ன ?

7) கிழக்கு பாகிஸ்தானிற்கு(இன்றைய பங்களாதேஷ்) பாகிஸ்தானிடமிருந்து விடுதலை வாங்கித் தந்த இந்தியாவை பெருமை பொங்க பார்த்த நீங்கள்  ஒப்பந்தம் போட்டு விட்டு அதனை மீறும் இந்திய அரசிலிருந்து வெளியேறி சுதந்திர நாடு கோறும் காஷ்மீர் மக்களை ஏன் எதிர்க்கிறீர்கள் ?.. இந்த இரு நிகழ்வுகளுக்கும் என்ன வித்தியாசம் தோன்றுகிறது ?..

8)  இந்திய நாடு என்று நீங்கள் எதைப் பார்க்கிறீகள் ?.. வெறும் வரைபடத்தையா ?.. இல்லை உள்ளே வாழும் மக்களையா ?..  எல்லைக்கோட்டு வரைபடமும் வெறும் மண்ணும் தான் நாடா ?..  மக்கள் என்ன அந்த மண்ணில் விளைந்த பொருளா ?..

9) அங்கு வாழும் மக்களே இந்திய அரசின் தலையீடை விரும்பாத போது அவர்களுக்கே இந்த அரசின் அடக்குமுறைகளின் மீது வெறுப்பு இருக்கும் போது இங்கிருந்து பொங்கி வடியும் உங்கள் தேசபக்திக்கு காரணம் என்ன?..

10) காஸ்மீரில் உள்ள மாநில அரசின் போலீசில் வேலை செய்யும் கணிசமான போலிசாரே பதவி விலகும் கடித்ததை (ஒரு மனிதன் அரசாங்க வேலையை விடுவதற்கு தயாராக இருந்தால் எவ்வளவு வெறுப்புற்றிருப்பான்?) அரசிடம் கொடுத்த காரணம் என்னவாக இருக்கும் ?..

11) இந்திய அரசு இவ்வலவு நாட்கள் காஷ்மீரில் தான் வாக்களித்தபடி தேர்தல் நடத்தாததற்கு காரணம் என்ன ?..

12) அடுத்தவனை சுரண்டித் திண்ணும் இந்திய அரசின் இந்த கேவலமான செயலுக்கு நீங்கள் ஆதரவாக இருக்கிறீர்களா ?..



இதை எல்லாம் சிந்தியுங்கள் ..

பிறகு கூறுங்கள்  .. காஷ்மீர் இந்தியாவுடையதா என்று ...

இதையெல்லாம் தெரிந்தும்  “ நீங்க சொல்றது எல்லாம் சரி தான் ... என்ன இருந்தாலும் அவங்க போராட்டம் தப்புங்க” என்ற தனது மறைமுக  இந்து வெறிக்கண்ணோட்டத்தில் இருந்து பேசும் அறிவு ஜீவிகளுக்கு நாம் இங்கு சொல்ல விளைவதெல்லாம் “ உங்கள் வீட்டில் ஒரு நாள் இராணுவம் இதே போன்று வெறியாட்டம் போடும் . அன்றும் நமது இந்திய இராணுவம் தானே என்று இப்படியே தேசபக்தி தவறாமல் இருப்பீராக.” என்பது தான்.

பண வெறியும் இரத்த வெறியும் பிடித்த இந்திய அரசின் அடக்குமுறைகள் ஒழியட்டும் ..

காஷ்மீர் மக்களின் போராட்டம் வெல்லட்டும்..

அடக்குமுறைகளுக்கு மக்கள் தரும் சவுக்கடி கண்டு ஆளும் வர்க்கங்கள் அலறட்டும் ..

Wednesday, September 8, 2010

ஜனநாயகவாதிகளே, டர்பன் கட்டிய நரி இடும் ஊளைக்கு உங்கள் பதில் என்ன?..

சிறிது நாட்களாகவே உணவுப் பொருள் பாதுகாப்பு மசோதா என்று ஆரம்பித்து அரசாங்க உணவுக் கிட்டங்கியில் உணவு தானியங்களை எலிகள் திண்ணும் பிரச்சனை வரை கேள்விப்பட்டு கொதித்தெழுந்தவர் முதல் தமது பங்குக்கு ’உச்’ கொட்டியவர் வரை அனைவரும் நேற்றைய செய்தித் தாளில் டர்பன் கட்டிய குரூர நரி (மன்மோகன் சிங்) ஒன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஊளை இட்டதைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் ..

கடந்த சில மாதங்களாகவே இந்த உணவு தானியப் பொருள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க இந்த பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று , உச்சநீதி மன்றம் உணவுக் கிடங்கில் எலிகள் சாப்பிட்டு , அழுகிப் போகும் உணவு தானியப் பொருட்களை ஏழை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.


நீலச் சாயம் முக்கின நரி
அந்த உத்தரவை சிறிது நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் மாண்புமிகு அமைச்சர் சரத் பவார். பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு உச்ச நீதி மன்றம் அட்வைஸ் தான் பண்ணுச்சு .. ஆர்டர் பண்ணலைனு கப்சா விட்டார் அந்த மாண்புமிகு..


கொஞ்சம் பொறுங்க.. எலி சாப்பிட்டு முடிக்கட்டும்

கடைசியில் உச்ச நீதி மன்ற பெஞ்சு கடுப்பேறி அசிங்கமாக திட்டாத குறையாக கூறியது. உணவுப் பொருட்களை இலவசமாக விநியோகச் சொன்னது கட்டளையே தவிர அறிவுரை கிடையாது என்று கிழித்து விட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் டர்பன் கட்டிய அந்த ஊதா நரி  பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது சாயத்தை தன் வாயாலேயே நக்கி நக்கி நீக்கியிருக்கிறது.

நரி கூறுகையில் ”ஏழைகளுக்கு உணவு தானியங்களை இலவசமாக கொடுக்க முடியாது. இந்தியாவில் 37% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்கள அனைவருக்கும் இலவசமாக கொடுக்க முடியாது. ஆனால் இந்த அரசாங்கம் ஏழை மக்களைக் காப்பாற்ற அந்த தானியங்களை குறைந்த விலையில் விற்கும்.

உச்ச காமெடி மன்றம்
இப்பொழுது அனைவருக்கும் கொடுத்துவிட்டால் நாளை பொது வினியோக முறையின் கீழ் மக்களுக்கு கொடுக்க உணவு தானியங்கள் இல்லாமல் உணவுத் தட்டுப்பாடு வரும் அபாயம் இருக்கிறது” என்று ஊளையிட்டிருக்கிறது அந்த நரி . மேலும் “உச்ச நீதி மன்றம் அரசின் கொள்கைகளுக்குள் தலையிடக் கூடாது” என்று பவ்வியமாக கூறியிருக்கிறது (சட்டத்தை அவ்வளவு மதிக்கிறாராம்)

சரி, நரியின் இந்த ஊளையின் முழுப் பரிமாணமும் என்ன என்று பார்ப்போம். இந்தியாவில் 37% பேர் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளார்கள் என்பதே கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அளவிட இந்த அயோக்கிய சிகாமனிகள் (மன்மோகன்,சிதம்பரம்,மாண்டேக் சிங் அலுவாலியா) மேற்கொண்ட முதல் திட்டம், வறுமைக் கோட்டிற்கான அளவீடை மாற்றி அமைப்பது. இந்த மக்கள் விரோதிகளின் கணக்குப்படி பார்த்தால் நகர்ப்புறத்தில் ஒரு நாளைக்கு 18 ரூபாய்க்கு குறைவாக சம்பாதிப்பவர்களும் கிராமப்புறத்தில் ஒரு நாளைக்கு ரூபாய்.11.40 க்கு குறைவாக சம்பாதிப்பவர்களும் தான் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்
அதாவது இவர்களைப் பொறுத்த வரை நகரத்தில் ஒரு நாளைக்கு இருபது ரூபாய் சம்பாதிப்பவன் எல்லாம்  டாட்டா , அம்பானியுடன் போட்டியிடும் அளவுக்கு பெரும்பணக்காரர்கள். உங்களுக்கே தெரியும் இருபது ரூபாயை வைத்துக் கொண்டு இன்றைய விலைவாசியில் மூன்று தேரத்திற்கு தேனீர் மட்டும் தான் குடிக்க முடியும் என்று.





இந்தியா - வல்லரசு
 இந்த அயோக்கியர்கள் சொல்லும் கணக்கே இவ்வளவு கேவலமாக இருக்க என்.சி. சக்சேனா தலைமையிலான வறுமைக் கோட்டுக்கான வல்லுனர் குழுவின் மதிப்பீட்டின்படி  இந்தியாவில் வ.கோ.கீ உள்ளவர்களின் அளவு 50%.

அதே நேரத்தில், முறைசாராத் துறைத் தொழில்களின் தேசிய ஆணையம் தனது அறிக்கையின் முதல் பக்கத்தில் 83 கோடியே 60 லட்சம் இந்திய மக்கள் (நமது மக்கள் தொகையில் 77 சதவீதத்தினர்) ரூபாய் 20 அல்லது அதற்கும் குறைவான தொகையில் ஒருநாள் பொழுதைத் தள்ளுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது (இதில் 18 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்பதை மனதில் கொள்ளவும்).

இவ்வளவு கொடூரங்கள் இங்கு இந்தியாவில் நடந்தேறிக் கொண்டிருக்க உணவுப் பொருட்களை எலி திண்று நாசமாகப் போனாலும் பரவாயில்லை மக்கள் திண்ணவேண்டுமானால் காசு கொடுத்துச் சாப்பிடட்டும் என்று இந்த நரி இங்கு ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.


வயிராற சாப்பிடும் உணவுப்பஞ்சம் இல்லாத ஜீவன்கள்

இங்கு நம் பசித்த மக்களுக்குக் கிடைக்காத உணவு தானியங்கள் ஐரோப்பிய  பெரு முதலாளிகளின்  பன்றிப் பண்ணைகளில் பன்றிகளுக்கு உணவாக  நமது மக்களுக்கு கொடுக்கப்படும் விலையை விட குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன என்பது தெரிந்தும் நாம் கோபப்படாமல் இருந்தால் மனிதனாக இருப்பதில் அர்த்தமே இல்லை.

இந்திய துணைக்கண்டம் வாழ் ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தும் ஜனநாயகவாதிகளே !! .. ஏழை மக்களுக்கு உணவு கொடுக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கொடுக்க முடியாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவர்களது கொள்கைகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் திமிர்த்தனமாக பதிலளித்திருக்கும் இந்த அயோக்கியர்களின் ஊளைக்கு உங்கள் பதில் என்ன ?...

உலகவங்கியின் தாளத்திற்கேற்ப இங்கு ஆட்டம் போடும் மன்மோகன் சிங் , ப.சிதம்பரம் ஆக்யோரைத் தூக்கி எறிந்து விட்டு  இதே போல் இந்தியாவில் 2001 ம் ஆண்டில் பஞ்சம் இருக்கையில் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்களை ஐரோப்பிய நாட்டு பன்றிப் பண்ணைகளுக்கு ஏற்றுமதி செய்த பா.ஜ.க வின் கரசேவை புகழ் அத்வானியை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா ?..

இல்லை ஆயிரக் கணக்கான விவசாயிகளின் நிலத்தைப் பறித்து டாட்டா முதலாளிக்குத் தாரைவார்த்த சி.பி.எம் ஆட்சியை வரவழைக்கப் போகிறீர்களா ?..

உங்களுக்கு வேண்டுமெனில் நீங்களும் சேர்ந்து தான் மோதிப் பெற வேண்டும்.


நீதி வேண்டுமா ?..   தேர்தலை புறக்கணியுங்கள்... 
புரட்சி ஒன்று தான் ஒரே வழி ..